Wednesday, March 30, 2011

இந்தியா vs பாகிஸ்தான்

  

இன்று மொகாலியில் நடைபெறவிருக்கும் உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருகிறது. அரையிறுதி போட்டியை காண உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகின்றனர். இதுவரை நடந்த 10 உலககோப்பை போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை (1992, 1996, 1999, 2003) போட்டியிட்டுள்ளனர். போட்டியிட்ட நான்கு முறையும் இந்திய வென்று இருக்கிறது. ஐந்தாவது முறையும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் இன்று இந்திய களம் இறங்குகிறது. இதுவரை நடந்த போட்டிகளின் விவரங்கள் கீழே...

1992 - பென்சன் & ஹெட்ஜஸ் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்ஐ தேர்வுசெய்தது. அதில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. சச்சின் டெண்டுல்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

1996 - வில்ஸ் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்றது. பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்ஐ தேர்வுசெய்தது. அதில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.. நவ்ஜோத் சிங் சித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

1999 - ஐ.சி.சி. உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. ஓல்ட் ட்ரபோர்ட்ல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது முறையாக தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்ஐ தேர்வுசெய்தது. அதில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெங்கடேஷ் பிரசாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2003 - ஐ.சி.சி. உலக கோப்பை போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது. செஞ்சுரியன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதன் முறையாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்ஐ தேர்வுசெய்தது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மொகாலி கிரிக்கெட் மைதானத்தை பொறுத்த வரையில் இந்திய இதுவரை 9 போட்டிகள் விளையாடி 5 போட்டிகள் வென்று இருக்கிறது.பாகிஸ்தானுடன் இந்த மைதானத்தில் இரண்டுமுறை போட்டியிட்டு இரண்டுமுறையும் தோற்று இருக்கிறது.பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டமான இந்த மைதானம் இந்திய அணிக்கு இந்தமுறை அதிஷ்டத்தை தருமா என்று பொறுத்து இருந்துதான் பார்கவேண்டும்.


தற்போது இருக்கும் இந்திய அணியில், இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த நான்கு உலக கோப்பை போட்டிகளிலும் விளையாடிய ஒரே வீரர் நமது லிட்டில் மாஸ்டர் சச்சின் மட்டுமே. அவரின் அனுபவம் நிச்சயம் இந்த போட்டிக்கு துணை நிற்கும். பேட்டிங்ஐ பொறுத்தவரையில் நம் அணி மிகவும் சிறப்பாக இருக்கிறது ஆனால் பந்துவீச்சு கொஞ்சம் கவலையை அளிக்கிறது. இருப்பினும் நாம் நூறு சதவிகித அர்பணிப்போடு விளையாடினால் நிச்சயமாக வெற்றிபெறமுடியும்.

All the best to Team India.



No comments: