Monday, March 21, 2011

ஜெண்டில்மேன்


கன்னியமான ‌விளையா‌ட்டு வீரர் என மறுபடியும் நிருபித்திருக்கிறார் நம் இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர். நேற்று சென்னையில் நடந்த இந்தியா மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கான உலக கோப்பை கிரிகெட் லீக் போட்டியில் ரவி ராம்பால் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் சச்சின். ஆஸ்திரேலிய நடுவரான ஸ்டீவ் டெவிஸ் அவுட் கொடுக்கவில்லை. ஆயினும், தாம் அவுட் என்பதை உணர்ந்த சச்சின் நடுவரின் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் பெவிலியனை நோக்கி நடந்தார். இ‌து குறித்து கரு‌த்து தெரிவித்துள்ள மேற்கு இந்திய அணி கேப்டன் டெர்ரென் சம்மி, சச்சின் நேர்மையை பாராட்டி அவரை ஒரு உண்மையான "ஜெண்டில்மேன்" எ‌ன கூறியுள்ளார்.

இப்படி இருக்க, நேற்று முந்தய நாள், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கான உலக கோப்பை கிரிகெட் லீக் போட்டி கொழும்புவில் நடந்தது. முகமது ஹபீஸ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் அக்மாலிடம் கேட்ச் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் தான் அவுட் எ‌ன உணர்ந்தும், அம்பயரின் முடிவுக்காக காத்திருந்தார். டிவி அம்பயர் அவுட் எ‌ன அறிவித்த பிறகுதான் பெவிலியனை நோக்கி நடந்தார். பின்னர் பேட்டி அளித்த பான்டிங், "தான் அவுட் எ‌ன தெரியும் இருந்தும் அம்பயரின் முடிவுக்காக காத்திருந்ததாக சொன்னர்". இவர் எவ்வளவு மோசமான விளையாட்டு ஸ்பிரிட் கொண்டவர் எண்பதை உணரமுடிகிறது. பான்டிங் இ‌து போல நடந்து கொள்வது புதிது அல்ல. நேர்மையற்ற தண்மை, விளையா‌ட்டு வீரர்களிடம் வாக்குவாததில் ஈடுபடுவது, அம்பயர்கலை மிரட்டுவது இதெல்லாம் கைவந்தகலை. ஒட்டுமொத்ததில் பிஹேவியர் என்பது சுத்தமாக என்னவென்றே தெரியாத காட்டுமிராண்டி இவர். இவரெல்லாம், கிரிக்கெடடில் இருந்து ரிடெயர் ஆண பிறகு த‌ன் கிரிக்கெட் வாழ்கையை திரும்பி பார்த்தால் சொல்லிக் கொள்கிறமாதிரி உருப்படியாக ஒன்றும் இருக்காது, இவர் செ‌ய்த அட்டூழியங்கல் தான் நினைவில் நிற்க்கும்.

No comments: