Monday, March 14, 2011

அலட்சியவாதிகள்...



சமீபத்தில் மிகவும் எரிச்சலை உண்டாகிய விஷயம், என் குழந்தைக்காக விண்ணப்பித்து எடுத்த புதிய பாஸ்போர்ட். ஏன்டா! விண்ணப்பித்தோம் என்று ஆகிவிட்டது. அவ்வளவு டென்ஷன். தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பித்து, ஒரே வாரத்தில் கிடைக்கவேண்டிய பாஸ்போர்ட் ஒன்றரை மாதம் கழித்துதான் கையில் கிடைத்தது.

விண்ணப்பம் செய்து, சரியாக மூன்று வாரம் கழித்து, அணைத்து ஆவணங்களுடன் சரிபார்க்க வருமாறு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து கடிதம்வந்தது. ஒரு வாரத்தில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது! அதுவும் மூன்று வாரம் முடிந்த நிலையில் இப்படி ஒரு கடிதம்... சரி! என்று அவசர அவசரமாக அனைத்து ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றிருந்தோம். அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பின் இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும் என்று அதிகாரி சொன்னார் (அப்போதே ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில்...)

ஒருவாரமும் முடிந்தது. பாஸ்போர்ட் வந்தபாடில்லை. இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில், வீட்டிற்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் சுமார் நான்கு முறை அலைந்திருப்போம் (இதற்காக கால் டாக்சிக்கு செலவு செய்தது 1000 ருபாய்). ஒவ்வொரு முறையும் காலதாமதத்திற்கு ஒவ்வொரு காரணத்தை சொல்லி அனுப்பினார்கள் அதிகாரிகள். இறுதி முயற்சியாக "க்ரிவேன்செஸ் செல்லு"க்கு ஒரு இ-மெயில் (grv.jscpv@mea.gov.in; pptgrievance@tn.nic.in) அனுப்பினோம். பதில் கிடைக்காது என்ற நம்பிக்கையோடு அனுப்பியதற்கு பதில் கிடைத்தது. அதில் பாஸ்போர்ட் உயரதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.

அவர் உறுதி அளித்த ஒருவாரம் கழித்து பாஸ்போர்ட் கையில் கிடைத்தது. அந்த பாஸ்போர்டில் வழங்கிய நாள் (Date of Issue) விண்ணப்பித்த ஒரு வாரத்தில் கிடைத்ததாக முன்தேதியிட்டு இருந்தது. எங்களுக்கு கொஞ்சம் முரண்பாடாக தோன்றியது. விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் ஏன் ஒன்றரை மதம் கழித்து கையில் கிடைத்தது. எங்கே தவறு என்று புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் அதிகாரிகளின் அலட்சியம் இதில் இருப்பது கட்டாயம் தெளிவாக புரிகிறது.

சாதாரண முரையில் வழங்கப்படும் பாஸ்போர்ட்க்கு 1000 ருபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனா‌‌‌ல் தட்கல் என்னும் துரித முறையில் வழங்கப்படும் பாஸ்போர்ட்காக 1000 ருபாயும் சேர்த்து கூடுதலாக 1500 ருபாய் (1 முதல் 7 நாட்களுள் பெற) அல்லது 1000 ருபாய் (8 முதல் 14 நாட்களுள் பெற) வசூலிக்கப்படுகிறது. இப்படி வசூலிக்கப்பட்டும், உரிய நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்காதால் மக்களுக்கு பணவிரயமும், காலவிரயமும் ஏற்பட்டு, அரசு அமைப்புகளின் மீதும், அதிகாரிகளின் மீதும், கடும் அதிருப்தி ஏற்ப்படுகிறது. ஆனா‌‌‌ல் அதை பற்றியெல்லாம் அதிகாரிகளுக்கு கவலையே இல்லை. அர‌சிய‌ல்வாதிகளையாவது 5 வருடத்திற்கு ஒரு முறையாவது தண்டிக்கமுடியும், ஆனா‌‌‌ல் இந்த மா‌தி‌ரி பொறுப்பற்ற, அலட்சிய அதிகாரிகளை ஒண்ணும் செய்யமுடியாது. அந்த கடவுளே நிணைத்தாலும் இந்த நாட்டு மக்களை இவர்களிடம் இருந்து காப்பாற்றமுடியாது என்பதில் எள்ளளவும் சந்தேகமும் இல்லை.

2 comments:

கத்தார் சீனு said...

அலட்சியவாதிகள் அதிகம் தான் நாட்டில் ....என்ன செய்ய??
அனுபவம் கசப்பாயிரிப்பினும் அதில் கற்கும் பாடம் மிக முக்கியம்....

சுதாகர் said...

தங்களின் மேலான கருத்திற்கு நன்றி.